நெல் நாத்தும், பெண்ணின் வாழ்க்கையும்........

அழகாக ஏர் பூட்டி !

ஆழமாய் விதை போட்டு !

எதிர் பார்த்து, காத்திருத்தலுக்குப் பின்

முட்டி மோதி வெளிவந்தது நெல் நாற்று!

நாற்றுக்குப் பார்த்துப் பார்த்து

தண்ணீர் ஊற்றி வளர்த்து,

அதன் வளர்ச்சியை

பார்த்துப் பார்த்து மகிழ்ந்து,

நெல் நாற்று பிறந்த இடம் விட்டு

வேறு இடம் போகும்

நேரம் வந்தது,

போன இடம் புதிது!

தேவைக்கு தண்ணீர் கிடைத்தாலும்,

ஒட்டி வாழ தடுமாற்றம்!

கொஞ்சம் கொஞ்சமாக

இருக்கும் இடத்தை அறிந்து,

ஒட்டி வாழ்கிறது நெற்பயிர்.............

எழுதியவர் : நா.வளர்மதி. (18-Nov-11, 9:31 pm)
பார்வை : 2781

மேலே