இலையுதிர் காலம்

மண்ணில் கால் பதித்து

வானளாவ உயர்ந்து நிற்கும்

மரத்திற்கு சுமை பாரம்

தாங்கவில்லை போலும்...

இலைகளை உதிர்த்து

கனிகளை விடுத்து

சுமைகளை இறக்கி

விட்டதாய்

பெரு மூச்செறிந்து நிற்கிறதோ ??

எழுதியவர் : பி.தமிழ் முகில் (19-Nov-11, 12:37 am)
சேர்த்தது : Tamizhmuhil
பார்வை : 303

சிறந்த கவிதைகள்

மேலே