சொல்லாத காதல்....



இயற்கையை மட்டுமே ரசிக்க தெரிந்திருந்த...

எனக்கு.... அவள்...

இறுமாப்பையும்... ரசிக்க தெரிந்தது...

செயல் அழகியாய் .... அவளின்...

நடவடிக்கைகளில் ,கட்டுக்குள் வர மறுக்கும்...

என் இதயத்தின் ....பதிலாய்...

காதலின் அறிகுறிகள்.... அவள்...

தரிசனம் வேண்டி

தவமிருக்க....

ஆரம்பமானது என் மனம்....

காத்திருப்பின் சுகம் உணர்ந்தேன்....

பாசத்தின் அளவுகோல் அவளிடம் கானபெற்றேன்...

பரிச்சயமான என் காதலை மட்டும்...

மண்ணுக்குள் புதைந்த வைரமென...

பாது காக்கிறேன்....

அவள் முகம் பார்த்து பேசும்...

தைரியமில்லாமல்...


எழுதியவர் : காளிதாசன்.... (6-Dec-11, 3:36 pm)
Tanglish : sollatha kaadhal
பார்வை : 295

மேலே