கை குழந்தை...



தூசி இல்லா பாதங்களின் தூய்மை....

திறந்தும் திறவாமலும்....

அழுதால் கூட கண்ணீர் கானா ...

விழிகள்.... இதுவரை இயற்கையோடு ....

ஒன்றிப்போன இசைஸ்வரமாய் ....

அதன் அழுகுரல்....

இதயம் துடிப்பதை உணர்த்துகின்றதாய்...

சுருங்கி விரிக்கும் அந்த பிஞ்சு விரல்கள்...

சிட்டுக்குருவியின் இதழினும் மெல்லியதாய்...

அதன் உதடுகள்...

கலைஎடுக்கப்பட்ட கழனியாய்....

தெளிவானதாய் .... அதன் தலை ரோமங்கள்...

மழலையாம்... மழலையை...

அள்ளிகொஞ்சாதவர்..... அரிதில் தான் இப்புவியில்...

எழுதியவர் : காளிதாசன்... (6-Dec-11, 3:45 pm)
சேர்த்தது : kalidasan
Tanglish : kai kuzhanthai
பார்வை : 294

மேலே