இளவேனில் காற்றில் இரவில் நடந்தோம் இணைந்து

இரவின்தோள் சாயும் இனிய நிலவு
வருகை புரிந்தயெழில் வஞ்சியுனைப் பார்த்து
தரவோவோர் வெண்பா தனையெனக் கேட்க
தருவான் அதைஇவனென் றாய்

----ஒருவிகற்ப இன்னிசை வெண்பா

இரவின்தோள் சாயும் இனிய நிலவு
வருகை புரிந்தயெழில் வஞ்சியுனைப் பார்த்து
தரவோவோர் வெண்பா தனையெனக் கேட்க
தருவான் அதைஇவனென் றாய்நிலாவும் வாழ்த்த
இருவராய் நாமும் இளவேனில் காற்றில்
இரவில் நடந்தோம் இணைந்து

---ஒரு விகற்ப பஃறொடை வெண்பா ஆறு அடியில் அமைந்தது
அடி ஐந்து முதல் பன்னிரண்டு வரை பெறும் வெண்பா பஃறொடை வெண்பா

அடி எதுகை ---இர வரு தர தரு இரு இர

சீர் மோனை ---1 ஆம் 3 ஆம் சீரில் ---இ இ வ வ த த றா இ இ இ இ

எழுதியவர் : கவின் சாரலன் (23-Oct-24, 8:38 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 4

மேலே