மகாலட்சுமியின் ராஜ்ஜியம்

❓❓❓❓❓❓❓❓❓❓❓

*மகாலட்சுமியின்*
*ராஜ்ஜியம்*

படைப்பு *கவிதை ரசிகன்*
குமரேசன்

❓❓❓❓❓❓❓❓❓❓❓

நீதிமன்றங்களில்
நீதி தேவதை
தீர்ப்பு சொல்லி
நீண்ட நாள் ஆகிவிட்டது
இப்போதெல்லாம்
மகாலட்சுமி தான்
தீர்ப்பு சொல்கிறாள்....

காலம் காலமாய்
கல்வியை ஆண்டு வந்த
சரஸ்வதியை
கள்ள ஓட்டுக்கள் மூலம்
தோற்கடித்து
அந்த நாற்காலியையும்
மகாலட்சுமியே
பிடித்து விட்டாள்.....!!

காவல் நிலையங்கள் கூட
சட்ட புத்தகத்தின்
அடிப்படையில்
இன்று செயல்படுவதில்லை...
மகாலட்சுமியின்
கைவிரல் அசைவில் தான்
எல்லாமே நடக்கின்றது....!

என்னதான்
படித்து பட்டம் வாங்கினாலும்
மகாலட்சுமி
சிபாரிசு இல்லாமல்
அரசு வேலை என்ன?
அரசுஅதிகாரியின்
கையெழுத்துக் கூட
வாங்க முடியாது.....

போக்குவரத்து காவலர்
உங்களை
வழிமறிக்கும்போது
லைசென்ஸ்
இன்சூரன்ஸ் புக்
ஆர்ச் புக் காட்டாவிட்டாலும்
மகாலட்சுமி காட்டினால்
அவர்களே !
சல்யூட் அடித்து
அனுப்பி வைப்பார்கள்
உங்களை.....

வருங்காலத்தில்
ஒவ்வொன்றுக்கும்
ஒரு சாமி இருக்காது
எல்லாத்துக்கும்
ஒரே சாமி தான்...
அது இந்த
"மகாலட்சுமி" சாமி தான்....


*கவிதை ரசிகன்*


❓❓❓❓❓❓❓❓❓❓❓

எழுதியவர் : கவிதை ரசிகன் (23-Oct-24, 9:13 pm)
பார்வை : 2

மேலே