முல்லைப் பெரியாறு அணை!
"நாங்கள் இருக்கிறோம்!
நதிகளைப் பார்த்துக்கொள்ள..."
என்று திடமாக,
திட்டவட்டமாகத் தெரிவிக்க,
உருவாக்குங்கள் ஒரு அமைப்பை!
நஞ்சான உண்மையொன்று...
பொய்களுக்கு இணங்கிச் செய்த
வெட்டி வேலைகளால்
புஞ்சையாகிப் போனது
பல ஏக்கர் நஞ்சைகள்!
ஆண்டாண்டுகளாக வழக்காடியும்
அதற்கு கட்டணமாக பலகோடியும்...
நியாயம் நியாயம் என்று
தாய்மடிக்காக அழும் குழந்தை போல
நேர்மை காத்தது தமிழகம்!
ஆட்சியை விடாதே, மனசாட்சியை விடு
என்று சொல்கிறதா மேலிடம்...?
ஆட்சி காட்சியடா,
மனசாட்சி கண்களடா மானிடா!
இசைந்து போகாதே, அந்த பின்னணி இசைக்கு!
உடைக்காமல் விடமாட்டேன் என்று அங்கும்
அந்த உறுதியை உடைக்காமால் விடமாட்டேன் என்று இங்கும்
போய்க் கண்டுதான் இருக்கிறது நாட்கள்...
உடைந்தே போய்விட்டார்கள் (விவசாயிகள்) ஆட்கள்!
என்ன நடக்கும் இங்கு...இனி?