மாலை வெயிலும்,மழைச்சாரலும்..........!
எனக்குள் ஏன் இந்த மயக்கம்?
உன் கண்களில் காந்தம் இல்லை!
உன் அன்பில் காந்தம் வைத்தாயோ?
என்னை உன் பக்கம் இழுத்தே
என் நினைவுகளைத் திருடியே,
என் வாழ்க்கையை தடம் மாற்றுகிறாய்!
சின்னதாய் சிரிக்கவில்லை!
சினுங்கிச் சினுங்கிப் பேசவில்லை!
சீராகப் பேசி சீர்குலைய வைத்தாய் என்னை!
உன்னை மனதில் நினைத்துவிட்டால்
கடல் அலைகள் தோற்றுப் போகும்,
என் மன அலைகளுக்கு முன்னால்!
மாலை வெயிலில் குளிக்கின்றேன்!
மழைச்சாரலில் குளிர்காய்கின்றேன்!
மல்லிகைப்பூவில் உன் முகம் பார்த்தேனடி மானே...