புத்தாண்டின் வேண்டுதல்...!
கண்ணால் கண்ட தீது...
கண்ணிலிருந்து தொலைந்து போகட்டும்,
கடந்தவை நினைவிலிருந்து...
கலைந்து போகட்டும்,
நேரத்தை அழித்தவை..
இனி நேராதிருக்கட்டும்,
மாற்றம் கொடுத்தவை..
மாறிப்போகட்டும்,
ஏக்கம் கொடுத்தவை..
எழாதிருக்கட்டும்,
தூக்கம் கெடுத்தவை...
தூர விலகட்டும்,
முடிந்தவையாவும்..
முற்றுப்புள்ளியாகிப் போகட்டும்,
இனி நம்மை...நாடிவருவது...
இனிய வசந்தமாய்...இருக்கட்டும்,
வாழ்வில்..நன்மையையே..
வாழவைக்கட்டும்,
என்றே வேண்டுகிறேன்...!