புனைகின்றாய் பூங்கவிதை காதலெழில் கண்ணால்

அனைவரையும் ஈர்க்கும் அழகு விழியே
சுனைநீர் சுவைத்தமிழ் பேசும் இதழே
புனைகின்றாய் பூங்கவிதை காதலெழில் கண்ணால்
எனைமட்டும் வீழ்த்துகிறாய் ஏன்

----ஒருவிகற்ப இன்னிசை வெண்பா

அனைவரையும் ஈர்க்கும் அழகு விழியே
சுனைநீர் சுவைத்தமிழ் பேசும் இதழே
கணைதொடுக் கின்றாயுன் காதலெழில் கண்ணால்
கணைஎனையே வீழ்த்துவ தேன்

----ஈற்றயலடி மாற்றிய இருவிகற்ப இரண்டாம் வடிவம்

எழுதியவர் : கவின் சாரலன் (17-Oct-24, 8:03 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 20

மேலே