புகை..
நேற்றைய பின்னிரவில்
தூக்கம் கலைந்து
விழித்த கணத்தில் - என்
ஜன்னல்களை திறந்து பார்த்தேன்
புகை தெருவெங்கும்
வியாபித்திருந்தது - அது
ஜன்னல் திரைச்சீலைகளை
அகிம்சையினாலேயோ , இல்லை
வன்முறையினாலேயோ
வெற்றி கண்டு
எனதறையெங்கும்
நுழைந்திருக்கலாம் ..
அக்கணத்தில்
புகை என்னை
சுற்றிலும் இருந்தது
நானும் புகையோடு
ஒன்றியிருந்தேன் ..
அலமாரியில் அடிக்கி
வைக்கப்பட்டிருந்த
புத்தகங்களிலும் ..
அலுவலக அவசரத்தில்
சுத்தம் செய்யப்படாமல்
வைத்திருந்த எனது சமையல்
அறைகளில் உள்ள பாத்திரங்களிலும்
புகை படிந்திருந்தது ..
புகை எனக்கு
கற்றுத்தந்தது
வாசிப்பின் விசுவாசத்தை ..
புகை எனக்கு
கற்றுத்தந்தது
அவசரத்தின் வலியை..
புகை எனக்கு
கற்றுத்தந்தது
வாழ்வென்னும் மாயையின்
சூட்சுமத்தை ..