என் காதல்

காற்றில் வைத்த சூடம் போல
காலம் கரைந்து போனது ஏன்
உன்னோடு இருந்தபோது மட்டும்??

உன்னைவிட்டு பிரிந்தபோது
கண்களில் கசிந்த
கண்ணீர் துளிக்கு தெரியுமா
உன் மீது நான் கொண்ட காதல் ??

தொடர்வண்டியின் ஓசையைவிட
உன்னைவிட்டு பிரியும் என் மனதின்
வலி ஓசை தான் அதிகம் கேட்டது...

வாழும் வாழ்க்கை உன்னோடு வாழவே
ஆசைப்பட்டது என் நெஞ்சம்...

ஜாதியும் மதமும்
காதலுக்கு சமாதி கட்டும் என்று
கனவிலும் நினைக்கவில்லை...

உன்னைவிட்டு பிரிந்ததாலும்
உனது நினைவுகளை விட்டு பிரியாமல்....

பிரியா....

எழுதியவர் : priya... (22-Jan-12, 10:20 pm)
Tanglish : en kaadhal
பார்வை : 477

மேலே