கள்வனிடம் கவர்ந்தவள்

தின்னமிட்டேன் கன்னமிட்டேன்
பல வீடுகளின் கல்லுடைத்தேன்
கோட்டையை தாண்டினேன்
இரும்பு கேட்டையே உடைத்தேன்
என் பாதம் படாத பங்களாக்கள் இல்லை
என் கை படாத கதவுமில்லை
இந்த களவாணியை கவர்ந்த
கன்னியே
மலைக்கோட்டைகளை குடைந்தவன் நான்
உன் மனக்கோட்டையை திறக்க
வழிவகை காணேன்
கள்ளச்சாவி போடும் கள்வன் நான்
உன் இதயக்கதவை திறக்க
எந்த சாவியையும் காணேன்
கண்ணசைவில் கதவை திறப்பவன்
உன் கண்ணசைவிற்காக காத்திருக்கிறேன்
பிறர் உடமையை திருடிய நான்
உன்னிடம் இழந்தேன் என் மனதை
இழப்பின் வலிமையை உணர்ந்தேன்
இனியொரு முறை செய்யேன் இத்தவறை
பறிகொடுத்தவன் பதறுகிறேன்
இழந்த என் மனதிற்கு ஆறுதலளி
இருவரும் ஆனந்தமாக வாழ வழிவிடு

எழுதியவர் : செல்வகுமார்.E (23-Jan-12, 2:26 pm)
பார்வை : 391

மேலே