நன்மதி வெண்பா - நூல் - பாடல் 60
எம்.ஆர்.ஸ்ரீநிவாசய்யங்கார் இயற்றிய
நன்மதி வெண்பா
இந்நூல் சுமதி சதகம் என்ற தெலுங்கு நீதிநூலின் தமிழ் மொழிபெயர்ப்பு ஆகும்
நூல்
நேரிசை வெண்பா
அரிய வழிச்செல்லேல் ஆய்ந்ததுணை யின்றி
யரகத்தில் அன்னம் அருந்தேல் - உரிமைபிறர்க்(கு)
உள்ள பொருள்கொள்ளேல் ஒன்னாரு நன்மதியே
துள்ளவன்சொற் கூறேல் துணிந்து! 60