மரத்துத் தொட்டில் !!!!!

சிறு ஈ , எறும்பு எனை
தீண்டாமல் இருக்க
கதிரவன் எனை
காணமல் இருக்க
சுந்தரன் ஒளி எனைச்
சுடாமல் இருக்க
வரப்பு பூச்சிகள் என்
கை பாராமல் இருக்க
நச்சிற்கினியவன் எனை
நெருங்காமல் இருக்க
உழவனின் நண்பன் எனை
உரசாமல் இருக்க
தேனீக்கள் என் இதழ்
சுவையை சுவைக்காமல் இருக்க
நான் வளர சிறப்பாக
நல்ல கல்வி நான் பெற
அவள் சென்று வயலில் வேலை பார்க்க
என் அன்னை எனை காக்க
என் கண்ணை தூங்க வைக்க
கட்டினால் எனக்கு மரத்து தொட்டில் .....

எழுதியவர் : ப்ரியாராம் (8-Feb-12, 1:37 pm)
பார்வை : 263

மேலே