மழை

இரசித்து கண் கொட்டாமல் பார்த்தேன் ஜன்னல் வழியே
மெல்லிய தென்றல் மேனி தழுவியது
தூறல் முகத்தில் மோதியது
கதவில் தொங்கிய திரைச் சேலை படபடத்தது
நிதானமாக ஆரம்பித்த மழை வேகம் பிடித்தது
மெய் மறந்து நின்றேன்
நானும் மழையும் மட்டுமே அங்கு
என்ன ஒரு சப்தம்; என்ன ஒரு கம்பீரம்
சாரல் பட்டு சிலிர்க்கும் என் மேனி
காற்று வேகமாக அடித்தது
மழை சற்றே அலைக்கழிந்தது
பட்டென அறைந்து சாத்தியது ஜன்னல் கதவு
என் எண்ணம் இடமாறியது
சகதியாய் ஓடும் மழை நீர்
முகம் சுளித்து, அருவருப்புடன் அதில் நடக்கும் மனிதர்கள்
குடை ஒரு கையில்; சேலை பாவடையுடன்

எழுதியவர் : (4-Sep-10, 7:00 pm)
சேர்த்தது : கீத்ஸ்
Tanglish : mazhai
பார்வை : 333

மேலே