வரம்....................
கலப்படம் நீக்கிய
காற்றை தருகிறாய்
நிலத்தில் ஊன்றி
நிழலை தருகிறாய்
புகையை உறிஞ்சி
புகலிடம் தருகிறாய்
மகத்துவமான
மழையை தருகிறாய்
வளத்தை கொடுத்து
வாழ்வை தருகிறாய்
ஏற்றமிகு எரிபொருளை
ஏழைக்கும் தருகிறாய்
உன் பெயரோ மரம்
நீ தான்
உலகிற்கே வரம்........