வரம்....................

கலப்படம் நீக்கிய
காற்றை தருகிறாய்

நிலத்தில் ஊன்றி
நிழலை தருகிறாய்

புகையை உறிஞ்சி
புகலிடம் தருகிறாய்

மகத்துவமான
மழையை தருகிறாய்

வளத்தை கொடுத்து
வாழ்வை தருகிறாய்

ஏற்றமிகு எரிபொருளை
ஏழைக்கும் தருகிறாய்

உன் பெயரோ மரம்
நீ தான்
உலகிற்கே வரம்........

எழுதியவர் : ramakrishnan (23-Feb-12, 8:01 pm)
சேர்த்தது : RMKRSN
Tanglish : varam
பார்வை : 181

மேலே