நவரத்தினமே
கார்குழல் தான் கருநீலமோ
மதிமுகம் தான் வைடூரியமோ
பிரகாசிக்கும் கண்கள் தான் வைரமோ
பல்வரிசைதான் முத்துச் சரமோ
செவ்விதழ்கள்தான் பவளமோ
மணிவாய்தான் மாணிக்கமோ
அணிந்த பட்டுதான் மரகதமோ
அலங்காரம் தான் புஷ்பராகமோ
வடித்தெடுத்த சிலைதான் கோமேதகமோ
உன் மெய்தான் பசும்பொன்னோ.