காலம் மாறும்!
தலைவாரி பூச்சூடி உன்னைப் பள்ளிக்கு
அனுப்பி வைத்தாள் உன் அன்னை.
சிலை போல ஏன் அங்கு நின்றாய் நீ
சிந்தாத கண்ணீரை ஏன் சிந்துகின்றாய்?
விலை கொடுத்து வாங்கிய திருமணத்தால்
வந்த கணவன் என்பதாலா அல்லது
விலைகொடுத்துப் பள்ளிக்குப் போகும்
மனைவியாகி விட்டோம் என்பதாலா?
காலம் மாறும் கணவனும் மாறுவான்
கவலைப்படாதே கண்மணியே
நாளும் நல்ல நாளாய் மாறும் உன்
மகளும் விலை கொடுக்காமல் போவாள் பள்ளிக்கு