உணர்வு
உன் நினைவில் சமிக்கைகள்
என்னில் ஒவ்வொன்றிலும்
ஞாபகப் படுத்துகின்றது
கருப்பு நிற சட்டையிலும்
கால் தடவும் ஓசையிலும்
வாகன உராய்விலும்
தலை திருப்பி என்
தாகம் தீர்த்து கொள்ள வேண்டும் - என
பொய்த்து போவதால்
ஒன்றுமே இல்லாத காலம் - என்னை
ஓங்கி அரைந்தது போல் என் - நினைவுகள்
பாலுணர்வின் பரிணமிகளை பத்திரப்
படுத்தும் இந்த சமிக்கைகள்
மெல்ல மெல்ல என் உச்சத்தில் - ஏறும்
ஒரு முனையில் நின்று அகல
வெளிப்பக்கம் என் விழி அலைகளோடு - பரப்புமாயின்
எனது சமிக்கையின் படலங்கள்
வெடித்து சிதறி
வெற்றிடமாக்கப்படும்
உணர்வு இழந்து தான் ஒன்றும்
இல்லாது , , ,
வீனையின் மீட்டலிலும்,
புல்லாங் குழலின் மூச்சிலும்,
புல் அறுத்து நின்றன என் புலன்கள்.
உலகத்தை விழித்திரையில் மூடிவிட்டு,
கருவிழி ஓடி ஒழிந்து போனது,
- அந்த நேரம்
வெறுத்து நிற்கும் என் மெய்யின் - வேர்கள்
செவியின் திரவம் என்னை பக்குவப்படுத்தி,
காணத்தின் நாணங்களை மட்டும் கேட்கச் செய்யும்.
சத்தமில்லாது ஆடும் என் நாவு,
- என் அணுக்கள்.
பார்வையின் பிரபஞ்சத்தினை மறந்து
ஒலிப் பிரபஞ்சத்தினை திறந்து
- நிற்கும் என் உணர்வுகள்.