நாராயணா

நாராயணா உனதருளில்
இம்மண்ணில் நான் பிறந்தேன்;
தந்தையும் நீயாக, தாயுமே நீயாக
எனது கண்ணிமையை நீ திறக்க,
நாராயணா உனை கண்டேன்;

சிற்றிளம்பிஞ்சாக,
பள்ளி நான் சென்றமர,
கல்வி எனக்கு அருளிய,
ஆசிரயனில் உனை கண்டேன்;

மணம் நான் புரிந்துகொண்டு ,
இல்லறம் நிறைவடைய,
மகனவன் மழலைதனில்,
நாராயணா உனை கண்டேன்;

மண்ணும் நீயே, மரமும் நீயே,
மழையும் நீயே, மடுவும் நீயே,
நீரும் நீயே, நெருப்பும் நீயே,
காற்றும் நீயே, கடலும் நீயே,
யாதும் நீயே, எங்கும் நீயென
நாராயணா நான் அறிந்தேன்;

புன்சிரிப்பில் நீ மலர்ந்து,
கையசைத்து நீ அழைக்க,
சரணம் நீயே என,
நாராயணா நான் விரைந்தேன்.

சம்பத்

எழுதியவர் : சம்பத் kolkata (25-Feb-12, 11:09 am)
பார்வை : 304

மேலே