கல்லூரி நட்பு

கனா காணும்
கல்லூரி வாழ்க்கை இது ...

கல்லூரி வாசலில்
காலடி எடுத்து வைத்தோம்
கள்ளம் கபடமின்றி வாழ்ந்தோம்
மூன்று வருடங்கள் ...
சிறு சிறு பிரச்சனைகளை ஏற்று
சந்தோஷ சிறகு விரித்து பறந்தோம்
கல்லூரி சோலையில் !...

கல்வி வளர்ந்தது
நட்பு மலர்ந்தது - சிலர் மனதில்
காதல் நுழைந்தது
கஷ்டங்கள் மறைந்தது
கல்லூரி வாழ்க்கையில் ...

காலம் கடந்தது
விடைப்பெற முடியாத நிலையில்
நண்பர்கள் கூட்டம் வேதனையில்
அவரவர் மனதில்
நட்பு சுடர் ஏற்றினோம் நினைவுகளாய் - என்றும்
அணையக் கூடாது என்ற நம்பிக்கையில் !...

உன் மனதில் நட்பு சுடர் ஏற்றும் உன் நண்பன் ...

நட்புடன்
suresh

எழுதியவர் : சுரேஷ் . G (3-Mar-12, 10:28 pm)
Tanglish : kalluuri natpu
பார்வை : 744

மேலே