உண்மையான நட்பு
கண்கள் மட்டும் தான்
பொய் சொல்லாது.........
உள்ளதை உள்ளபடி
காட்டும் ................
ஒன்றை ஒன்று
ஏமாற்றாது...............
கண்கள் இரண்டு இருந்தாலும்
காட்சி என்பது ஒன்றுதான்
ஒரு கண்ணை மூடி பார்த்தாலும்
மறுகண் உணர்வதில்லையா ?
பிழைகள் இன்றி காட்சியை-நம்
விழிகள் அறிவதில்லையா ?
அதுதான் நம்
அழகான நட்பு