மனம்,கண் கலங்கியது (அவர்களுக்கு சந்தோசம்)

அருகில் உள்ள
அநாதை இல்லத்திற்கு
அன்பு தம்பியின்
அன்பு புதல்வனின்
பிறந்த தினத்தை
கொண்டாட சென்றோம்

எத்தனை அனாதைகள் ?
எத்தனை ஊமைகள் ?


அவர்களுக்கு
உணவு வழங்கியதும்
உணவுக்கு முன்
கடவுளை vanaginaargal
உணவுக்கு பின்
எங்களுக்கு கைகுலுக்கி
வணங்கிய அவர்கள்
முகத்தில் சந்தோசம்
எங்கள் மனதில்
மன அழுத்தம் .
கண்கள் கலங்கியது
ஏன்இந்த அவலம் !

திரும்பும்போது
அவர்கள் காட்டிய
அந்த டாட்டா
எங்களை மீண்டும்
வாருங்கள் என்பது
போல் தெரிந்தது !

ஏழையின் சிரிப்பில் மட்டும் அல்ல இறைவன் !
அநாதை ஊமையின் சிரிப்பிலும் இறைவன்தான் !

என்றும் அன்புடன் "நட்புக்காக"
இது அநாதை "குழந்தைகளுக்காக"

எழுதியவர் : சேதுராமலிங்கம்.u (12-Mar-12, 4:28 pm)
பார்வை : 357

மேலே