சொல்லாதகருத்தல்ல(7

சொல்லதகருத்தல்ல "நம்பிக்கை"

நிலத்தில் பயிரிட
"நிலத்தை" பதபடுத்த வேண்டும்
நம்பிக்கையை "வளர்க்க"
"நம்மனதை" பக்குவபடுத்தவேண்டும்

விவசாயி பயிரிடும் முன்
என்ன செய்கிறார்
நிலத்தில் உள்ள
கற்களை அகற்றியும்
புற்களை அகற்றியும்
குச்சிகளை அகற்றியும் - பின்
உழுது உரமிட்டு
விதை விதைக்கிறார்

"அது போல"

நாம் நம்
முன்னோர்கள் , முனிவர்கள்
போன்றவர்களிடம் கற்றகருத்துக்களை
விதைகளாக விதைத்து
வளர்க்க வேண்டும் - அதை
வளர்க்க முயற்சிதேவை
முயன்றால் முடியும்
"நம்பிக்கை" இருந்தால்
வெற்றி நிச்சயம் !

என்றும் அன்புடன் "நட்புக்காக"
இது எல்லோருக்கும் "நம்பிக்கைபிறக்க"

எழுதியவர் : சேதுராமலிங்கம்.u (13-Mar-12, 2:53 pm)
சேர்த்தது : sethuramalingam u
பார்வை : 206

மேலே