இன்று காலை புதிதாய் பிறந்தது

மஞ்சள் தூவி பனி பொழியும் காலை
மார்கழிப் பனியுடன் புதிதாய் பூக்கும் மலர்கள்
எழுந்து வரும் இளம் சிவப்பு சூரியன்
இரவின் துயிலுக்கு விடைகொடுத்து
கலைந்திடும் கூந்தல் காற்றில் மிதக்க
பூவிதழ் தன்னில் புன்னகை ஏந்தி
வாழ்த்தவோ வரவேற்கவோ அன்றி
அதிகாலை அழகுக்கு அழகு சேர்க்கவோ
அவளும் வந்து நின்றாள் காலைத் தென்றல் வாசலில்
இன்று காலை புதிதாய் பிறந்தது
என் வாசலில்

----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (16-Mar-12, 11:02 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 227

சிறந்த கவிதைகள்

மேலே