கண்ணீரில் சிறந்தது

பிறக்கும் போது
அழுதேன்
என் முதல் கண்ணீர் ...........

அது சிறந்தது அல்ல ..........

தவறு செய்தால்
தாய் வலிக்காமல்
அடிக்க ...........
நம் நடிப்பை
வெளிபடுத்தும்
ஒரு கண்ணீர்..............

அது சிறந்தது அல்ல ..........


பெண்ணின் அழகில் மயங்கி
பேரின்ப கடலில் முழ்கி
கரை சேர்த்த பின்
உன் உயிரை கரைக்கும்
காதல் கண்ணீர் ...............

அது சிறந்தது அல்ல ..........


உன்
உயிர் வலித்தால்
கண்களில் வரும்
கண்ணீர் ............

அது சிறந்தது அல்ல ..........

உன் உயிர் வலித்தால்
உனக்காக
நட்பு விடும் கண்ணீரே
சிறந்தது.............

எழுதியவர் : கவிஞர் :ஜெ .மகேஷ் (16-Mar-12, 1:53 pm)
பார்வை : 478

மேலே