சோக சுடர் !!!

மனதிற்கு பிடித்தவர்கள் மனதை புரிந்துகொள்ளவில்லை ........................
என் மனதிற்கு பிடித்தவர்கள் என் மனதை புரிந்துகொள்ளவில்லை..............

காயபடுத்தி கலங்க வைத்தனர்
என் கண்ணீர் துடைக்க கைகள் இல்லை
கண்கள் வலிகளை மறக்கவில்லை!!!

துயரம் இறக்கி வைக்க வழிகள் இல்லை
அமைதியை தேடி அலைகிறேன்.
அனைவரையும் நேசிக்கும் இதயம் என்னை மட்டும் வெறுக்கின்றது .

எனக்கு வேதனைகளை கூட்டி என்னை வேழ்வியாக்குகிறது .............................
கண்ணீர் கடலை எழுப்பி
என்னை கவிதை வரைய செய்தது!!

நீங்காத சோகம் என் நெஞ்சில் அலை அலையாய்
அலைகளின் ஓசை அடங்குவது என்றோ
என் அன்பை புரிய
வைக்க வழிகள் ஏதும் உண்டோ...................................

எழுதியவர் : சுருதி கீர்த்தி (16-Mar-12, 1:53 pm)
பார்வை : 511

மேலே