என் அன்பின் ஆழங்கள் மட்டும் என்றும் உன் காலடியில்

சரியான பாதையில் செல்லும் போதே சறுக்கி விழுந்தவன் நான் !

இன்று கரடு முரடான சாலையிலும் வேகமாக ஓடுகிறேன்
அவள் பின்னால் ......

உணர்வுள்ள உண்மை காதலும் ஊமையாகி போனது !
அன்பே நீ இதுவரை திரும்பி பார்க்காததால் ..............

வந்தாய் ஒருநாள் உன் காதலை என்னிடம் சொல்ல ......................
அன்று விமோசனம் கிடைத்தது என் இதயத்திற்கு
சோகங்களுகெல்லாம் மருந்தாய் வந்தவளே !

என் குருதியின் துளிகளும் உன் பெயர் சொல்லுமடி!

தெளிந்த தேனில் துளி விஷமாய் உன் அத்தை மகன் !
என் இதயத்தை இறக்க வைக்க எமன் அனுப்பிய தூதுவன் அவன் ...................................

பெண் கேட்க வயது இல்லைதான் எனக்கு
இருந்தாலும் கேட்டேன் உன் அப்பாவிடம்!

மறுத்து விட்டார் அந்த பரந்த மனசுக்கு சொந்தகாரர் !

பிரித்து விட்டார், என் இதயத்துக்கு சொந்தமானவளை !

கடைசியில் உன் சொந்த பந்தங்களின் கண்ணீர் துளிகள் உன் காலடியில் ..................................

அவைகள் தான் நிறுத்தியது உன் கண்ணீரையும்
என் சந்தோசத்தையும் .....

இன்று மூச்சு விட கூட முடியாமல் நான் .........

நீயோ மணவறையில் உன் அத்தை மகனுடன்
மணகோலத்தில் உன்னை பார்க்க நானும் வந்தேனடி !

கண்கள் ஈரமாக ! இதயம் வெற்றிடமாக !

அன்று முதல் இன்று வரை கால் விலங்குடன் மரத்தடியில் நான் ..........................

இந்த பைத்தியகாரனை வேறென்ன செய்யமுடியும் !

உன் மேல் வைத்த அன்பின் ஆழங்கள் மட்டும்
என்றும் உன் காலடியில் சமர்ப்பணம்

எனக்கு மீண்டும் மீண்டும் மறுபிறவி வேண்டும்
நீ கிடைக்கும் வரை ..............................................

அரவிந்த்

எழுதியவர் : Aravind (21-Mar-12, 10:52 pm)
பார்வை : 314

மேலே