நிலத்தின் மதிப்பு

நிலத்தின் மதிப்பு
எளிதில் புரிவதில்லை;

மேலோட்டமாகப் காண்கையில்
கருவேல மரங்களும் காய்ந்த பூமியும்;

பாட்டனார் காலத்தில்
பார்த்துப் பார்த்து வாங்கியது;

சிறுகச் சிறுக சேர்த்த சொத்து
நல் சேமிப்பாய் வளர்ந்தது;

அடுக்கு மனை கட்டிடவே
நல்ல விலைக்கு விற்று விட்டோம்;

இயந்திரம் கொண்டு 'வானம்'
தோண்டினார்கள்;

தரமான செம்மண்
மலையாய்க் குவிந்தது;

நிலத்தின் மதிப்பு
இன்று புரிந்தது!

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (2-Apr-12, 6:27 am)
பார்வை : 194

மேலே