கனவென்றே பிரிந்துவிட்டாய்!

அழகான வீட்டில்
அளவான குடும்பம்,
பாசம் காட்ட இரு குழந்தை,
அன்பான மனைவியாய்
ஆயுள் முழுதும் நீ!

இவையனைத்தும் கிடைக்குமென்றே
நித்தம் மகிழ்ந்திருந்தோம்.

புத்தம் புது வாழ்க்கைக்காக
நம் கனவுகளை
கனவென்றே எண்ணி
பிரிந்துவிட்டாய்

என்னுயிர்
காதலியே!

எழுதியவர் : ராஜேஸ்குமார் (2-Apr-12, 3:47 pm)
பார்வை : 344

மேலே