கனவென்றே பிரிந்துவிட்டாய்!
அழகான வீட்டில்
அளவான குடும்பம்,
பாசம் காட்ட இரு குழந்தை,
அன்பான மனைவியாய்
ஆயுள் முழுதும் நீ!
இவையனைத்தும் கிடைக்குமென்றே
நித்தம் மகிழ்ந்திருந்தோம்.
புத்தம் புது வாழ்க்கைக்காக
நம் கனவுகளை
கனவென்றே எண்ணி
பிரிந்துவிட்டாய்
என்னுயிர்
காதலியே!