இதுவே கதி
----இதுவே கதி----
எந்த நிலையிலும் உங்களுக்காக
எழுந்து நிற்பதே
என் கொள்கையாக்கி கொண்டேன்.
எப்படியாவது உந்தி தள்ளி
என்னை கீழே விழ வைப்பீர்கள்
என்கிற நம்பிக்கையில்....
அகிம்சை போதிப்பதையும்
அறவழி நடப்பதையும்
தேர்ந்தெடுத்து விட்டேன்
அடிக்கடி அவமானங்களை
அள்ளி அள்ளி கொடுப்பீர்கள்
என்கிற அனுமானத்தில்.
உங்கள் உண்மை மகிழ்ச்சியை
காண்பதே
உயிர் வாழவதன் இலட்சியமாக்கி கொண்டேன்.
கண்ணீர் சிந்தி கதறும் அளவிற்கு
காயங்களை எனக்கு
காணிக்கையாக்குவீர்கள்
என்ற நிச்சயத்தில்.
தேசத்தின் பிரிவினைகளை எதிர்த்து
போராடபோகிறேன்.
நாளை எப்படியும் என்னை
மதத்தலைவராய்
மாற்றிவிடுவீர்கள்
என்கிற சத்தியத்தில்
அனைவரும் ஒன்றுபடுங்கள் என்று
அறைக்கொவல் விடப்போகிறேன்.
அனாதைப் பிணமாய் என்னை
ஆக்கிவிடுவீர்கள் என்ற ஆசையில்.
நான் யாரென்றே
நாடு மறந்து போனபிறகு
நல்லவர் விருதுக்கு
என்னை பரிந்துரைப்பீர்கள்
என்கிற பரவசத்தில்
பல ஆசைகளோடும்
பல ஆதங்கத்தோடும்
ஒரு ஆத்மா புறபட்டு இருக்கிறது
இந்த தேசத்திற்காக போராட...
-- தமிழ்தாசன் ---