சுகமான சுமை(அலை)கள்

உதறிவிட்ட உறவுகளையும் பிரிந்துவிட்டப் பந்தங்களையும்
நினைத்தேன் மனம் பாரமானது
மன கவலைகளை கண்ணீர் துளிகளாய் கரைத்திட்டேன் கடலினிலே
மன பாரத்தை மண் மீது இறக்கி வைத்தேன்
கோபுரமாக
பெருகி வந்த கடலலை கரைத்துவிட்டு போனது என் மனபாரத்தை
சுவடில்லாமல் மறைந்தன சோகங்கள்
புதுவெள்ளம் போல் என்னுள் ஏனோ ஒரு புத்துணர்வு
துக்கங்களை தூக்கி எறிந்து துள்ளிகுதித்த உள்ளத்தோடு புறப்படலானேன் புன்னகையுடன்
எதோ ஒன்று என் கால்களை வருடியது
அது பிரிய மனமில்லாமல் பாதங்களை மன்றாடிய என்
கண்ணீர் அலைகள்
வாரி எடுத்து முத்தமிட்டேன் வந்துவிடு என்னோடு என்று !!

எழுதியவர் : கல்பனா சென்னை (20-Apr-12, 3:20 pm)
சேர்த்தது : kalpanadeviK
பார்வை : 248

மேலே