சேஷாத்திரி சுவாமிகள்

நீயும் நானும்
நினைவில் நிஜமாய்
வாழ்ந்திடுவோம் ;

மேலும் மேலும்
உயிரில் உணர்வாய்
இருந்திடுவோம்;

உன்னை தேடி
தவிப்பதுவும்,
உன்னை நாடி
இருப்பதுவும்
என் மனதின்
இயல்பு;

விண்ணை தாண்டி
இருப்பதுவும்,
விண்ணாய் மாறி
இருப்பதுவும்
உன் மனதின்
இயல்பு;

இயல்பாய் என்றும்
இருப்பவரே,
இறைவன் கண்டு
உணர்ந்தவரே;

வருக நீ , அருள்
புரிக நீ ;

வாழ்க சேஷாத்திரி !
வாழ்க வளமுடன் !

எழுதியவர் : மா வி பாலகுமார் (24-Apr-12, 9:45 am)
பார்வை : 281

மேலே