சாபம்

இறகுகள் சாபம் தான்...

ஈசலுக்கு தெரியாது இறகு முளைக்கும் நாளே அதன் இறுதிநாள் என்று.

ஒளியும் சாபம் தான்...
மின்மினி பூச்சிக்கு தெரியாது தான் ஓளி உமிழ்வதால் தூக்கன்னாங்குருவி கூட்டில் விளக்கவோம் என்று...

விடியல் சாபம் தான்...
ஆயிரம் நட்சதிரங்களுடம் மின்னிகொண்டிருகும் இரவுக்கு தெரியாது தன் சாயம் வெளுக்கபோகிரதென்று....

காதல் சாபம் தான்...
நட்புக்கு தெரியாது ஒவொருமுறை காதல் சொல்லப்படும் போதும் தான் கொல்லப்படுகிறோம் என்று...

எனக்கு சபமாய் வந்தவளே

விதியின் பேரை சொல்லி என்ன வாழ்க்கையை விளையாட்டு மைதானம் ஆக்கிவிடாய்....

சாபம் தொடரும்.......

எழுதியவர் : (24-Apr-12, 8:58 am)
சேர்த்தது : ksk2020k
பார்வை : 191

மேலே