அழிக்க படாத ஓவியமாய் அவள்

ஒருநாளில் வாடிவிடும் பூ
பூக்களை கண்டாலே வாடுகிறது
அவளது முகம் - விதவை
விழிகளில் கண்ணீரோடு

விதைவைக்கி பொட்டு இல்லை
விதவைளும் பொட்டு இல்லை
கைம்பெண்ணுக்கு பொட்டு வைத்தோம்
கைம்பெண்ணிற்கு பொட்டு வைத்தோமா

நாய் நரி பூனையோடு
சகுனம் கேட்டது அவளாலும்
சந்ததிக்கே பொறுக்காது
சாலையில் அவள் நடந்தால்

தாய்மை அடையும் முன்னே
அவள் கைம்பெண்ணானால்
காரணம் குடித்து
குடல்வெந்த கணவனுக்காக

எப்போதோ முளைத்த ஆணாதிக்கம்
அவன் இறந்த பின்னும்
விதைத்துவிட்டு போகிறான்
பெண்ணிடத்தில்

தனிமையில் எரிகிறாள்
என்னை ஊற்றுகிறது அவள் மீது
சாஸ்திரமும்
சம்பிரதாயமும்

மஞ்சள் முகத்தினிலே
திரு நீறை திலகமிட்டு
வெண்ணிற சேலை கட்டி
வீட்டோடு முடக்கி வைத்தோம்

மன்மதன் இறந்தபின்னும்
மஞ்சள் குங்குமுமம் குறையவில்லை
இன்றுவரை ஊர் நடுவில்
சிலையெடுத்து சிங்காரம் செய்து வேடிக்கை .

எழுதியவர் : Jagadeeshwaran (25-Apr-12, 6:07 pm)
பார்வை : 356

மேலே