இருட்டிலே வாழும் தீபங்கள்

அங்கத்திலே ஆணாக
ஆடையிலே
அரைகுறை பெண்ணாக
ஆணும் இல்லை பெண்ணும் இல்லை
அதற்கும் நடுவிலே
திருநங்கையாக
தெருவில் நிற்கும் நான்
ஒன்பது உஸ்ஹு அட்ட
ஊர் வைத்தது பெயர்கள்
எனக்கான பெயரை
நானே வைத்தேன்
பிரசன்னா பிரியாவாக
சுதந்திரமாய்
என்னை நான்
என்னுள் உணர்ந்தேன்
எத்தனை செருப்படி
ஊரும் உறவும் உணராது
எப்போதும் ஏற்காது
வீடும் இல்லை
உறவும் இருந்தும் இல்லை
தெருவோரம் படுத்தேன்
தேவிடியானு நினைத்து
காலை சொரிந்த ஆண்மக்களுண்டு
கைதட்டிய சத்தம் கேட்டு
தலை கவிழ்ந்த
தர்மர்களுண்டு
சத்தியமாய் சொல்கிறேன்
வேலை இல்லை
ஒருவேளை உணவுக்குதான் பிச்சை
விடியலுக்கு முன்னால்
வரவழைத்து
விழிதவர்களுண்டு என் முகத்திலே
அகத்திலே குறை இல்லை
அங்கத்திலே குறை கண்டார்
புடவை கட்டி
பொட்டு வைத்து
வளவி மாட்டி
வாழ்கிறேன் திடமாய்
அருவருப்பாய் பார்க்கும் சமுதாயத்தில்
அழுக்குகள் இல்லை என் மனதில்
அடுத்த வேலை
அடுத்த நொடி ஆச்சரியம்
அதுலே நான் அதிசயம்
அன்னை ஈன்றாள் ஆணாக
நான் வளர்ந்தேன் பெண்ணாக
அனாதையதான் இருக்கிறோம்
அனதையாகதான் இறப்போம்
அதனாலென்ன
எனக்கான வாழ்க்கை
நான் வாழ்ந்தேன் நங்கையாக
கடைசியில் காக்கை குருவிக்கி இரையாக