பெண்னின் அவலம்.

அன்றோ
எனக்கு முதல் இரவு
ஆயிரம் இரவுகள் கடந்தாலும்
அந்த இரவு
என் உற்றவனை நானும்
என் மனவாளன் என்னையும்
புரிந்துக்கொள்ளும் தருணம்

எனக்கோ பதற்றம்
கணவனிடம் நான் ஒருவனை
காதலித்து ஏமாந்துப்போனேன்
என்று கூறிவிடலாமா
என யோசித்துக்கொண்டிருந்தேன்!

அந்த பொன்வேளையில்
என் உயிர்த்தோழனான கணவன்
அவர் வேரொரு பெண்னை
காதலித்து ஏமாற்றபற்றார்
என்று கூறினார்.

சரி! அவரே கூறிவிட
நானும் கூறினேன்
நானும் ஏமாற்றபட்டேன் என்று.

ஏழரைச் சனியின்
தாக்கம் – அவரைச்
சந்தேகம் என்னும் பேய் பிடித்தது
நள்ளிரவு பன்னிரெண்டு மணிக்கு.

அப்போது தான் நினைத்தேன்
இத்தருணத்தில் தான்
பேய் பிடிக்கும் என்று.

ஆனால் காலம் கடந்தாலும்
நான் திருமணமாகியும்
ஒர் கன்னிப் பெண்.

விந்தை யுகத்திலும்
ஆணுக்கு ஒர் நியாயம்,
பெண்க்கு ஒர் நியாயம் தானே...,

எழுதியவர் : ஸ்ரீராம் கிருஷ்ணன் (3-May-12, 6:42 am)
பார்வை : 319

மேலே