சடலத்தின் சபதம்

நான் அந்நியனின்
அணுகுண்டினால் அள்ளிவீசப்பட்ட
சடலம்!
என்உடல் எரிந்து
கொண்டிருக்கிறது!
இரத்தங்கள் யாவும்
சிவந்து
கொண்டிருக்கிறது!
தீயின் அழுத்தத்தால்
என்ஆன்மா
வீங்கி
கொண்டிருக்கிறது!
நிலம்,சடலங்களை
சகித்து
கொண்டிருக்கிறது!
அதன் முதுகுப்புறம் புடைத்து
கொண்டிருக்கிறது!
அதில் போராளிகளின் சடலங்கள்
திணிக்கப்பட்டு
கொண்டிருக்கிறது!
சவக்குழியை விட்டு
எழுந்திடப்பார்க்கிறேன்!
எரிந்த கால்கள்
முறிந்திடும் என்பதால்
நெருப்புக்குள்ளே
நெளிகிறேன்!
எரியும் என் சடலத்தின்
அருகே
ஒருவன்,
ஒடிந்தகாலுடன்
ஓடிவருவதை
பார்க்கிறேன்!...அவனை
காப்பாற்ற நினைத்து
என் கையை
நீட்டினேன்!..அய்யோ!
எனது கை,
ஒருகைப்பிடி
சாம்பலானதால்,
கதறித்துடிக்கிறேன்!
அய்யோ!..
தீயின்கோரம்,என்
வீரத்தசைகளை
வெறியூட்டுகிறதே!
என்
விந்துவின் வீரியம்,
வெட்டப்பட்டு
வெடிக்கிறதே!
அவலம்!அவலம்!..
நான் கண்தானம்
செய்யப்பார்த்தேன்!
வேண்டாம்!வேண்டாம்!
இந்த அருவறுப்பு
தேசத்தைப்பார்த்து,
ஆட்டுச்சடலங்களை வைத்து
ஆட்சி செய்யும்
தேசத்தை
பார்த்துப்பார்த்து
பாவம்தேடியது,அந்த
கண்கள்!
அக்னியே!
பாவிகளைப்பார்த்து
பயந்துநடுங்கிய
அந்தகண்கள்,
இனியும்
எனக்குவேண்டாம்!..
அக்னியே!
ஆவிகளின் ஆண்மையே!..
ஆணையிடுகிறேன்!
அந்த கண்களை,
எரித்துவிடு!!!..
வெறிகொண்ட
சடலமெல்லாம்
வெடிக்கிறதே!
இந்த சடலம்
எரிந்தும்,
கடைசி நொடிவரை
கதறியதே!... அது ஏன்?
கண்ணை
பிடுங்கச்சொல்லி
கட்டளையிட்டதே!..
அது ஏன்?...
வீரத்தசைகள்
வெப்பத்திலும்
வெறிகொண்டதே!...
அது ஏன்?...எதனால்.
சுடுகாடும்
சிரிக்கிறதே! ஆனாலும்
சுருண்டு கிடக்கும்
சடலம்
ஆனேனே நான்!...
அய்யோ!.. என
நினைத்ததே!..அதுஏன்?
இடுகாட்டுத்தலைவன்
உடன்கட்டை ஏற
இழுத்துச்செல்ல
வருகிறானே!
எங்குபோனார்கள் அந்த
காரிகைகள்!
கணவனைத்தேடியா?
அந்தோ! விழிபிதுங்கி
வெளியே கிடக்கிறதே
அவனா
உன் கணவன்!
பிணக்குவியல்களை
பாதுகாக்க
பாடையைச்சுற்றி
நிற்கிறதே
பசியோடு நரிகள்.
நீ, அங்குபோய்
தேடிப்பார்!..
அடுப்பெரிக்க
ஆளில்லாத காரணத்தால்,
அக்னிப்பஞ்சம் என,
இருண்டு கிடக்கிறதே!
அந்த இரவுக்குள்
சென்று பார்!...ஆம்
அது
இருண்ட மயானம்!...பயப்படாதே
அதற்க்குள் சத்தங்கள்
இருக்காது!
சபதங்கள் இருக்காது!
யுத்தங்கள் இருக்காது!
ஆன்மாக்களின்
அழுகியஒலிகள்மட்டும்
ஆபாசமாய் இருக்கும்!
இன்னும் சற்று
உள்ளே சென்று பார்!!
அய்யோ!...அய்யோ!...
ஆ!....ஆ!....ஆ!....
என்ன இது!....
என்ன இது!...
பயப்படுகிறாயா!
புழுக்கள் மொய்த்த
புதிய மயானம்
பார்த்தாயா!
இவர்களை
இரவுக்குள்
மறைத்துவைத்து
வஞ்சகத்தகனம்
செய்திருப்பதை
பார்த்தாயா!...
எடுத்து வைத்து
எரிப்பவனும் எரியாமல்
கிடக்கிறான்!
புதைத்தவனையும்
தோண்டிபார்த்தவன்
புதையாமல்
கிடக்கிறான்!...
கணவனாம்!கணவன்!
சற்று அங்கே பார்!
நிர்வாணம் நீதிபெற
சாமச்சுடுகாடுகள்
சத்தியம் செய்து கொண்டிருப்பதை
பார்!
நான் சொல்வது
ஒன்றும்புரியவில்லையா
நிர்வாணமயானம்
அமைத்து
பெண்மைபிரேதங்களை
நிரப்புகிறார்கள் பார்!
பிரேதமாயினும்,
ஊடல்சஞ்சலம் வைத்து
மயானசுகத்தில்
தியானம் இருக்கிறார்கள் பார்!...
திரைச்சீலைகளை
உறுவி எரிந்ததால்
பிரேதச்சீலைகள்
எரிவதைப்பார்!!...
கருகட்டிய ஒரு
காரிகை வயிற்றில்,
கத்திகள்
கலவிகொள்வதை
பார்!
மயக்கம் வருகிறதா!
மரணம் வருகிதா!
என் பின்னே இன்னும்
சற்று தூரம் நடந்து
வா!...
நடக்கும்போது
சடலங்கள்
காலில் படாதவாறு வா!
என் கணவர்!.....என் கணவர்!...இவர்தான்!...
இவரேதான்!....
அய்யோ!....அய்யோ!.....
அழாதே!..அழாதே!!...
உன் கணவர்
இவர்தான் என்று
எனக்கு தெரியும்!
இவனால்
இந்த தேசத்துக்கு
காவி கொடுக்கப்பட்ட
தலைகள்
எத்தணையென்று
என்னால் எண்ணமுடியவில்லை!
சடலம்ஆவதற்க்கு முன்
சபதமொன்று
கொடுத்தான்!..
என் சடலத்தை எடுத்து
மயானத்தீயில்
எரிக்கும்போதும்
தீயினுள் இருக்கும்
நெருப்பினிலேநெளிந்து
கொண்டிருப்பேன்!
எரியும்
கால்களால் எழுந்து
நடக்க முயல்வேன்!
கால்ஒடிந்த ஒருவன்
என் அருகே
ஓடிவரும்போது,
அவனை காப்பாற்ற
எரிந்துகொண்டிருக்கும்
என் கைகளை நீட்டுவேன்!அப்போது
எனது கைகள்
ஒருகைப்பிடி
சாம்பலாய் போனால்
மீண்டும்
உயிர்த்து எழுவேன்,
ஒரு கவிஞனால்,
கவிதை வடிவில்.
என்று கூறி
எதார்த்தமாய்
விழுந்தான்!...
அவன்தான்
அந்நியனின்,
அணுகுண்டால் அள்ளி
வீசப்பட்ட
ஒரு சடலம்!...