தண்ணீரில் மறையும் கண்ணீர்.

நாளை-
இங்கே குவியும் கரங்கள்...
வேறு கடவுளின் பெயரை
உச்சரிக்கலாம்.

நாளை-
இந்தக் கோபுரங்களும்...
மாளிகைகளும்...
வேறு பெயரால் அழைக்கப் பட...

இன்றைய கிழமைக்கும்
வேறு பெயர் கிடைக்கலாம்.

அடுத்த கணத்தை...
புதியகாற்று ஊடுருவ...

உதிரும் பழமைகளில்
நிகழ்கிறது உருமாற்றம்.

புதிய...புதிய நிழல்கள்
பூத்துப் பூத்து மறைய...

தனது அச்சில் ...
மாறாமல் சுழலும் பூமி

தனது துயரங்களை
தவித்து மறைக்கும்

தண்ணீரில் மறையும் கண்ணீராய்.

எழுதியவர் : rameshalam (10-May-12, 9:47 pm)
சேர்த்தது : rameshalam
பார்வை : 177

மேலே