மரணம்

மனம் வீசும் மலராய் பிறந்து ,
மணம் வீசும் மலர்களுடன் செல்கிறோம் .
தொப்புள் கொடியில் மலர்ந்து ,
மண்ணின் அடியில் புதைகிறோம் .
ஏ மனிதனே .........!!!
மூச்சு உள்ளவரை தான்
ஜாதி மதம் .
மூச்சு நின்றவுடன் ,
அனைவரும் சவம் .
எறும்பும் புழுவும்
நமக்கு
உயிர் உள்ளவரை ,
துரும்பு .
உயிர்
போனவுடன் ,அவைகளுக்கு
நம் உடல்
கட்டி கரும்பு
காதலுக்கு ,
கருப்பு வெள்ளை
நிறம் கிடையாது
என்பர்
ஆனால்,
மரணத்திற்கு மட்டும் தான்
நிறம் கிடையாது
ஆம்
கருத்தாய் உள்ளவனும் இறக்கிறான் ,
கருப்பாய் உள்ளவனும் இறக்கிறான் .
வெறுத்தவனும் இறக்கிறான்
வெள்ளைக்காரனும் இறக்கிறான் .
அரசனும் ஆண்டியாவன்
எப்போது ,
உண்மையில் மரணம்
நிகழ்ந்தபோது .....
ஆம்
காரில் செல்பவனுக்கு,
கரிசல் மண்ணும் ,
பழையசோறு உண்டவனுக்கு
பாறை மண்
என்ற
பேதம் கிடையாது
-மரணத்தில்
இறுதியில்
மரணம் ஒன்றே மாசற்றது ,
மரணம்
ஒன்றே சமத்துவத்தை காப்பது
ஆனால் மனிதனே...!!!
நீ மரணத்தை தேடி செல்லாதே
மரணம்
உன்னை தேடி வரும்வரை