சுமையோடு சமைந்தோம்!

சோகங்களைப்போல்
ஆறுதல்சொல்ல
யாருமில்லை!
சுமைகளைப்போல்
பாரம் இறக்கி
வைக்க யாருமில்லை!
மெய்பேசுவதுஇங்கு,
பொம்மைச்சுமை,
மெய்பேசுவதுபோல்
மிளகுப்பொய்களை
கடுகாக்குவது,
உலகம் சுமக்கும்
உண்மைச்சுமை!
உன்பெயரை
உலகம்
சொல்லும்வரை,
தோல்விகள்
முயற்சியின் சுமை!
எதிர்காலச்சக்கரத்தில்
சுழலும்
எதிர்பார்ப்புகள்,
இளைஞனின்
வாழ்க்கைச்சுமை!
படிப்புதெரிக்கப்படாத
இளசுகளின்
கையில்எரியும்
வேலைச்சுடர்,
அடிமையின் சுமை!
பணமில்லாத
சுமையால்,
பறிபோகும்
மதிப்புபட்டம்,
உயிரிழந்த
உருவச்சுமை!
நிகழ்ந்த
வருத்தங்களால்
தாங்காத
மன அழுத்தங்கள்
மனிதனின்
மரணச்சுமை!
பிழைப்பு இழந்த
நேரங்களால்,
தரித்தலைப்பு
தன்தலையில் ஏறும்
வட்டிச்சுமை!
வஞ்சககீரீடத்தை
தலையில்சுமக்கும்
மனிதனால்
நம்பிக்கைக்கு
நரகச்சுமை!
கண்ணைப்பார்த்து
காலைஒடிக்கும்,
காகைக்கற்களின்
கருங்குருதியாய்
கண்டவன்
கண்களிலெல்லாம்
கர்வச்சுமை!
நாளைக்கென
போட்டதிட்டம்,இன்றே
முடித்தாலும்
சிலநிமிட
திண்டாட்டத்தால்
உயிர் இழக்கும்
எதார்த்த நேரங்களின்
ஏமாற்றம்
எதிர்பார்க்காத சுமை!
குரல்ரளையில்
குழிதோண்டி,
உருப்பறை
சாதனங்களை,
உடம்புக்குள்
உருக்கியதால்
வாய்பேசா
வார்த்தைகளுக்கு
மெளனங்கள் சுமை!
காதுகேளா
தகடுகளில்
பதிந்திருக்கும்,
அமைதிப்பாறைகளால்
அவனின்
பருவமும் சுமை!
என்
கண்ணுக்கும்
தொண்டைக்கும்
காதுக்கும்
மனிதனுடன்
நேரடியுத்தம்
இல்லாததால்
என்மரணத்தின்
சத்தம்கூட
மழலையின்
சத்தமாகும்!
சுமைகளை
துக்கிக்கொண்டு
செல்லும் மனிதனே,
ஏன் இந்த
விரைவுப்பயணம்?
அதனால் நீ கண்டது
உன்
மரணப்பயணம்!