இம்சையரசிதான் நீஎனக்கு

கட்டி வைத்திருந்த கண்கள்,
விட்டு வைக்க முடியாத விரல்,
சுட்டு சுருண்டு விழுந்த மேனி,
பட்டுச் சிக்கிச் சிதைந்த மனம்,

ஒட்டியிருக்கும், ஊசலாடும் உயிர்,
விட்டுவிட துடித்து முடியாமல்,
வெட்டிவிடவும் வகையில்லாமல்,
கட்டிவைத்துக் காத்திருக்கும் காதல்,

சட்டையினை உரித்து, உதிர்த்து,
உடல் வெளிவந்து உலகையே
அதிரவைக்கும், உயிர் உறையவைக்கும்,
கொடியநஞ்சினைக்கொண்ட நாகம்போல்,

என்னினின் துன்பம் தொலைத்து,
எண்ணின வன்மம் புதைத்து,
இன்பம் விதைத்து, உலாவந்தது,
உன்னின் கடை விளைந்த காதல்.

இந்த நிமிடமும் எந்த இடையிலும்
நொந்த நடையிலும் இன்பமே பயக்கும்
என்னின்ப இதயராணி, இம்சையரசி,
உன்னின்ப உணர்வு விழியசைவால்.

எழுதியவர் : thee (17-May-12, 2:02 pm)
பார்வை : 145

மேலே