இன்று நீயிருந்தால் அவ்வையே ...1

நாளும் நல்லது சொன்ன
நற்கவி அவ்வையே!
இன்று நீயிருந்தால்
இவர்களைப்பற்றி
எழுதுவதென்ன?

அன்றாடும் விலையேற்றி
அல்லல்படும் மக்களுக்கு
ஆசை வாக்குறுதிகளை
அள்ளிவீசிய அரசியல்வாதியிடம்
'அறம் செய விரும்பு' என்றா?

அடிக்க அடிக்க நகரும்
அம்மிக்கல் மக்களில்
அதிலும் சிலபேர்
போராட்டம் செய்து
பொங்கி எழுந்தால்...
அவர்களிடம் போய்
'ஆறுவது சினம்' என்றா?

மக்கள்ஊழியர்களாக
மாதசம்பளம் வாக்கும்
மேல்நிலை கீழ்நிலை
எல்லா நிலையிலும்
எதையாவது கொடுத்தால்தான்
எதுவும் செய்வேன் என்று
ஏந்தும் கையுடையோருக்கு
என்ன சொல்வாய் அவ்வையே?
'இயல்வது கரவேல்' என்றா?

……………………….(தொடரும்)

எழுதியவர் : பரிதி.முத்துராசன் (27-May-12, 11:29 am)
பார்வை : 179

மேலே