எலியாரேஎலியாரே
மஞ்சள் அரைத்தாயா?கஞ்சி கொடுத்தாயா?
இங்கே கொஞ்சி விளையாடும்
கிளிகளை விரட்ட வந்தாயா?
நாட்டு நட்டாயா? எதற்கு வருகிறாய் நீ?
கலை பறித்தாயா ?
என் தோட்டத்தில் நீர் பாய்ச்சினாயா?
உரம் போட்டயா?
எதற்கு வருகிறாய்?
வரி,வட்டி எதை கட்டுகிறாய்? நீ.
மானங் கெட்டவனே!
உன் பல்லைப் பிடுங்கிவிடுவேன்
இல்லையேல்
பூனையாரைக் கூப்பிடுவேன்!
போய் விடு மதி கெட்டவனே!
என்ன?
இரண்டு காதுகளை தூக்குகிறாயா!
உனக்கு அவ்வளவு கோபமா?
எலிப் பொறியை எடுத்து பிடித்துவிடுவேன்
ஓடி விடு..எலியாரே !
பிழைத்துப் போவாய்!