சுனாமி
பிறந்த போதும்
இறந்த பிறகும்
உடைகள் கூட
உனதில்லை மனிதா!
ஆழிப்பேரலைகள்
ஆர்ப்பரிக்கிறதோ
அழியும் மனிதனின்
ஆணவத்தை பார்த்து!
வாரிச் சுருட்டி
வசமாக்கிக் கொல்லுமோ
அப்பாவி பெண்களையும்
குழந்தையையும் சேர்த்து!
உயிர் வாழ
இந்த பூமி - இனி
அருகதையானதா?
மனிதனின் வாழ்க்கை
இங்கே
சிறுகதையானதா?