அவளுக்காக

கண்ணீர்
காயவில்லை
கவலைகள்
நிறைய இருந்தபடியால்
.........!
அவளது
உயிர் ஓய்வு!!!
உறவுகளின்
அன்புக்காக
பிள்ளையின்
பாசத்துக்காக ஏங்கிய
தாயின்
பிரிவு......!!!
தொலைதூரம்
ஆனாலும்
தொலைபேசி
அழைப்பும் இல்லை!!!
இன்று
எல்லா உறவுகளும்
வந்தது
அவளில்லை .......
வறுமை
அவளது
உயிரை எரித்தபோதும்
உதவாத பந்தம்
பாடை சுமக்க வந்தது
அவளுக்காக ...............!!!
உயிரோடு
இருக்கையில்
உதவாத மனித உறவு
பிரிவுத்துயரில்
வேசம்
போடுகிறது!!!!
- ஜே.எஸ்.ராஜ்-

எழுதியவர் : ஜே.எஸ்.ராஜ் (21-Jun-12, 11:44 am)
பார்வை : 188

மேலே