என்றும் இனிமைதான்
பிறரை நோகடிக்காமல் தன்னைத் தானே
தேற்றிக் கொள்ள வேண்டுமென்றால்
ஒளிமுகம் கொடுத்து தன்னையே
உருக்கிக் கொள்ளும் மெழுகுவர்த்தி போல
என்றும் இனிமைதான்-வாழ்வில்
பிற பணிகளில் ஈடுபட்டு அந்தப்
போராட்டங்களை மறக்க முயலவேண்டுமேன்றால்
பொதி சுமக்கும் கழுதையைப் போல
என்றும் இனிமைதான் -வாழ்வில்
இவ்வகைப் போராட்டங்கள் பிறருக்கும்
உள்ளதாக எண்ணிப் பார்த்து தம்மைத்
தேற்றிக் கொள்ள வேண்டுமென்றால்
கனி கொடுக்கும் வாழை மரம் போல
என்றும் இனிமைதான்- வாழ்வில்
இவ்வாறான போராட்டத்தைத்
தாங்கிக் கொள்வதற்கு தம்மைத்
தயார்படுத்திக் கொள்ள வேண்டுமென்றால்
பாறையில் முளைக்கும் வேர்களைப் போல
என்றும் இனிமைதான் -வாழ்வில்
போராடும் உணர்வை துளி தூறலாய் வளர்த்துக்கொள்ள வேண்டுமென்றால்
சிலந்தியின் தன்னம்பிக்கை போல
என்றும் இனிமைதான் -வாழ்வில்!!