வெள்ளைரோஜாக்கள்...!
வெள்ளைரோஜாக்கள் ரத்தத்தால்
அபிசேகம் செய்யப்படுவதை ..இனியும்
ரகசியப்படுத்துவதில் அர்த்தமேயில்லை ....!
வன்முறை வித்துக்களால் ....
வசந்த மலர்கள் ...நேச உறவுகள் ..
வாட்டமுறுவதைத் தடுக்க வேண்டுமெனில் ...
முதலில் சண்டைக்கோழிகள் ..
சாகடிக்கப்படவேண்டும் ...!?
சமாதானம் சொல்லாதீர்கள் ...
அப்போதுதான் சமாதானப்புறாக்கள்...
சுதந்திரமாய் வானில் சிறகடிக்க முடியும் ..!
தற்காலிக ஒப்பந்தங்கள் ...
தரைமட்டமாக்கப்பட்டால்தான் ...
நிரந்தரத் தீர்வுகள் நிலைநிறுத்தமுடியும் ...!
காந்தியத்தை இன்னமும்
கையில் எந்திக்கொண்டிருந்தால் ...
காஸ்மீரம் நம் கைகளில் இருக்கப்போவதில்லை ..
பகவத்கீதையை மட்டுமே படித்துக்கொண்டிருந்தால்
பஞ்சாப்பும் நம் எல்லையில் இருக்கப்போவதில்லை
வெண்தோல் போர்த்திய நரிகள் ...
பசுவேடமிட்டு ...
பாரதத்தை பந்தாடிக்கொண்டிருக்கும்போது ...
வெறும் உண்ணாவிரதங்களும் ...
கண்டனப் பொதுக்கூட்டங்களும் ..
மனிதச் சங்கலி வளையங்களும் ..
கண்ணீரஞ்சலிக் கவிதைகளும் ...
பாரதத் தேசத்தைப் பாதுகாத்திடுமோ ..?
மதப்போர்வைக்குள் ஒளிந்துக்கொண்டு
மதம்பிடித்துத் திரியும் இழிமனிதர்கள் ..
மானுடத்தில் இல்லாமலே போனால்தான் என்ன ?
அரசியலைச் சாக்கடையாக்கி ...
பணவேட்டையாடும் இந்த
மக்களாட்சி மன்னர்கள் ....
பாரதத் தேசத்தின் தேசிய பாவ சின்னங்கள் ..!
மனிதாபிமானத்தைத் தொலைத்துவிட்டு ..
இந்த இழிமனிதர்கள் எதை
தேடிக்கொண்டிருக்கிறார்கள் மண்ணில் ..?
சகோதரத்துவத்தைச் சமாதியாக்கிவிடு ....
இந்தச் சாக்கடைப் புழுக்கள்
என்ன சந்தோசம் கண்டார்கள் நெஞ்சில் ..?
சமத்துவத்தைச் சாம்பலாக்கிவிட்டு
இந்தச் சர்வாதிகாரிகள்
என்ன சாதித்தார்கள் இந்த உலகில் ..?
ஆறடிக்குள் அடங்கிப்போகும் வாழ்கையில்
ஆகாயத்தை அளக்கத் துடித்திடும் ஆசைகள் ...
அரைகைப்பிடியில் அடங்கிப்போகும் சாம்பலில்
அகிலத்தையே அடக்கத் துடிக்கும் ஆணவங்கள் ..!
இந்த விளைவுகளுக்கெல்லாம்...
இனி விவாதங்கள் வேண்டாம்..!
வீறுகொண்டு எழுந்து ....
விண்ணைத்தாண்டித் துரத்தி அடிப்போம் ..!
அமைதியின் விடியலில்
அகிம்சையின் ஒளிப் பிறக்கட்டும் ..
அதுவரை ..........