எல்லாம் உன் வசம்
இரவும் பகலும்
விழித்திருக்கும் போதும்
உறங்கும் போதும்
உன் வசம்
உன் செயல்பாடு!
பிறரை அறிந்து கொள்வதைவிட
தன்னை அறிந்து கொண்டு
செயல்படுவது எதனையும்
உன்னிடமிருந்து
எடுத்துக் கொள்ள முடியாது
யாராலும் !
வெற்றியோ தோல்வியோ
விதைகளை வீசிவிடு
வானத்தில் பறக்கும் பலூன் போல !
தோல்வியாக இருந்தால்
அங்கேயே மிதக்கட்டும்
வெற்றியாக இருந்தால்
உன் வசம் வந்து சேரட்டும்
எல்லாமும் உன் வசமே !